"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Yoga Mudra – யோக முத்ரா

Yoga Mudra – யோக முத்ரா. “யோகாசனம்” மற்றும் “யோகா” என்பது இந்தியாவில் உருவான ஒரு அற்புதமான கலை. நம் முன்னோர்களாகிய சான்றோர் மற்றும் ஆன்றோர்களால் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனவளக்கலை பயிற்சியாகும்.

இன்றைய தினம் “யோகா” (Yoga) என்று சொல்லப்படும் இந்த கலையானது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் வேகமாக பரவி வருகிறது. அதற்கு காரணம் இந்த பயிற்சியானது பிற உடற்பயிற்சிகளைப்போல உடலை கரடுமுரடாக்குவதில்லை. அதற்குப்பதிலாக உடலை மென்மையாக்குகின்றன. இளமையை தக்கவைத்துக் கொள்கின்றன. இதனாலேயே வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர்.

தொப்பைக் கணபதி போன்று உடல் கொண்டவர்களைக்கூட அவன் தம்பி பழனி ஆண்டியைப்போல் மாற்றும் திறன் இந்த ஆசனத்திற்கு உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது அல்லவா ?

ஆனால், அது உண்மைதான்.. யோகாசன வரிசையில் ”யோக முத்ரா ஆசனம்” (Yoga mudra Asana) என்று ஒரு பயிற்சி உள்ளது. எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் கொண்டது.

Yoga Mudra Asana.

அதுமட்டுமல்ல முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் திறன் இதற்கு உண்டு.

ஆகையால், இன்றைய பதிவில் பெருங்காயத்தைக்கூட வெங்காயமாக மாற்றும் சிறப்பு பெற்ற “யோக முத்ரா” ஆசனத்தைப்பற்றிதான் பார்க்க இருக்கின்றோம்.

வாருங்கள்… இந்த ஆசனத்தை பயிற்சி செய்யும் முறையைப்பற்றி பார்ப்போம்.

பெயர் – Yoga mudra Asana.

தமிழ் – யோக முத்ரா ஆசனம்.

சமஸ்கிருதம் – Yoga mudra Asana.

ஆங்கிலம் – Psychic Union Pose.

வேறுபெயர்கள் – Yoga mudra.

ஆசனத்தின் நிலை – Sitting, Binding.

பயிற்சியின் கடின தன்மை – Advanced.

உடல் கோணம் – Forward-Bend, Stretch.

முதலில் விரிப்பின் மேல் பத்மாசனத்தில் அமர்வது போல் கால்களை மடக்கி நன்கு நிமிர்ந்து உட்காரவும் .

பின் இருகைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று மடித்து இடது கையால் வலது காலின் பெருவிரலையும், வலது கையால்  இடது காலின் பெருவிரலையும் பிடித்துக்கொள்ளவும்.

இது சிரமமாக தோன்றினால் இரு கைகளையும் பின்னால் ஒன்றோடு ஒன்று பிடித்துக்கொள்ளவும். 

Yoga Mudra Asana -female.

பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறு மூக்கு அல்லது வாய்ப்பகுதி தரையில் படும்படி நிதானமாக குனியவும். அதன் பின் மூச்சை இயல்பாக விடலாம். 

இந்நிலையில் 30 வினாடிகள் அப்படியே இருக்கவும். அதன்பின் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி எழுந்து பழைய நிலைக்கு வரவும். 20 வினாடி கழித்து மீண்டும் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி முன்போல் குனியவும். இவ்வாறு இப்பயிற்சியை 3 முதல் 5 தடவை செய்யவும்.

அதன்பிறகு சிறிது ஓய்வுக்குப்பின் வேறு வகையான ஆசனங்கள் செய்ய வேண்டுமெனில் செய்யலாம். அனைத்து ஆசனங்களையும் செய்த பின் கடைசி ஆசனமாக ”சவாசனம்” கண்டிப்பாக செய்ய வேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளவும்.

பயிற்சியின் பலன்கள்

இந்த ஆசனமானது எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் கொண்டது.

தோள்பட்டை, முதுகெலும்பு தண்டுகளை வலுப்படுத்துகிறது. கைகள், கழுத்து, மார்பு, இடுப்பு, முழங்கால்கள் ஆகியவைகளை பலப்படுத்துகிறது.

மேலும் முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சினைகள், வயிறு சம்பந்தப்பட்ட அஜீரண கோளாறுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனை அனைத்தையும் ஓட ஓட விரட்டும் திறன் இப்பயிற்சிக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலும் நீங்கும். நீரழிவு நோயையும் கட்டுப்படுத்தும்.

முதுகு தண்டு நன்கு வளைந்து கொடுப்பதால் இளமை மேலிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

மேலும், இப்பயிற்சியால் முகப்பொலிவும், வசீகர தோற்றமும் உண்டாகும்.

Yoga Mudra Asana. eappadi iruntha nan.

மன அழுத்தத்தைப் போக்கும் திறனும் இதற்கு உண்டு. யோக ஆசனங்களில் இது தனி முத்திரை பதிப்பதால் இதற்கு யோக முத்திரை என்று பெயர்.

கழுத்து, தோள்கள், முதுகு, இடுப்பு, முதலியவைகளில் காயங்களோ அல்லது வலிகளோ இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

கணுக்கால், முழங்கால் மூட்டுகளில் வலிகள் இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவேண்டும்.

சமீபத்தில் உள் உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவேண்டும்.

இதயத்தில் பிரச்சனை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

பெண்கள் இந்த ஆசனத்தை மாதவிடாய் காலங்கள், கர்ப்பமாக இருக்கும் காலங்கள், பிரசவத்திற்கு பிந்தைய சில மாதங்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

யோக முத்திரை என்று சொல்லப்படும் இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் இதற்கு உண்டு என்பதனை அறிந்துகொண்டோம்.

மேலும் தோள்பட்டை, முதுகெலும்பு தண்டுகளை வலுப்படுத்துகிறது. கைகள், கழுத்து, மார்பு, இடுப்பு, முழங்கால்கள் ஆகியவைகளை பலப்படுத்துகிறது.

முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சினைகள், வயிறு சம்பந்தப்பட்ட அஜீரண கோளாறுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளையும் கட்டுப்படுத்தும் என்பதனை அறிந்துகொண்டோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கழுத்து, தோள்கள், முதுகு, இடுப்பு, கணுக்கால், முழங்கால் மூட்டுகளில் காயங்களோ அல்லது வலிகளோ இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

இதயத்தில் பிரச்சனை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மட்டுமல்லாது சமீபத்தில் உள் உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவேண்டும்.

பெண்கள் இந்த ஆசனத்தை மாதவிடாய் காலங்கள், கர்ப்பமாக இருக்கும் காலங்கள், பிரசவத்திற்கு பிந்தைய சில மாதங்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும். என்பதனையும் பார்த்தோம்.

சரி, இனி நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “தொப்பை வயிறு” என்னும் பிரச்சனையைப்பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!