இன்றைய பதிவில் நாம் உத்தித பத்மாசனம் என்னும் ஆசனத்தைப்பற்றிதான் பார்க்க இருக்கின்றோம். பத்மாசனம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?... அதனுடைய "அப்டேட் வெர்சன்"தான் இந்த Utthita Padmasana - உத்தித பத்மாசனம். ”உத்தித” என்றால் சமஸ்கிருதத்தில் "உயர்த்துதல்" அல்லது "தூக்குதல்" என்று பொருள். பத்மாசன நிலையில் இருந்தபடியே உடலை தரையில் இருந்து மேலே உயர்த்துவதால் இந்த ஆசனம் "உத்தித பத்மாசனம்" (Utthita Padmasana) என அழைக்கப்படுகிறது. தரையில் உட்கார்ந்தபடி செய்வது பத்மாசனம் என்றால் அதே பத்மாசனத்தை அந்தரத்தில் செய்தால் அதுவே ”உத்தித பத்மாசனம்” ஆகும். "Elevated" என்றால் ஆங்கிலத்தில் "உயர்த்தப்பட்ட" என்று அர்த்தம். எனவேதான் ஆங்கிலத்தில் இது "உயர்த்தப்பட்ட தாமரை ஆசனம்" என்று பொருள்படும்படி "Elevated lotus Pose" என அழைக்கப்படுகிறது. இதனை சமஸ்கிருதத்தில் "துலாசனம்" (துலாம் +ஆசனம்) எனவும் அழைக்கின்றனர். "துலாம்" என்பது தராசை குறிக்கும். இந்த ஆசனத்தில் இருக்கும்போது உடலின் அமைப்பு பார்ப்பதற்கு பொருள்களை எடை போடும் "தராசு" போல் இருப்பதால் இதனை சமஸ்கிருதத்தில் "துலாசனம்" எனவும். தமிழில் "தராசு ஆசனம்" எனவும் அழைக்கின்றனர். "தராசு" ஆங்கிலத்தில் "ஸ்கேல்" (Scale) என்று அழைக்கப்படுகிறதல்லவா அதனால் இந்த ஆசனம் ஆங்கிலத்தில் "Scale Pose" என குறிப்பிடப்படுகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் இன்னும் ஒரு பெயரும் இருக்கிறது. அதுதான் "Utpluthih asana" (உட்ப்ளுதிஹ் ஆசனம்). "உட்ப்ளுதிஹ்" என்றால் சமஸ்கிருதத்தில் "தூக்குதல்" அல்லது "வேரோடு பிடுங்குதல்" என்று பொருள். இந்த ஆசனத்தில் மொத்த உடலும் இரு கைகள் மூலம் மேலே தூக்கப்படுவதால் இதற்கு "உட்ப்ளுதிஹ் ஆசனம்" (Utpluthih asana) என்று பெயர். உத்தித பத்மாசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Utthita Padmasana. தமிழ் - உத்தித பத்மாசனம். சமஸ்கிருதம் - Tulasana. (துலாசனம்), Utpluthih asana (உட்ப்ளுதிஹ் ஆசனம்). ஆங்கிலம் - Scale Pose. வேறுபெயர்கள் - Elevated lotus Pose. ஆசனத்தின் நிலை - Sitting. பயிற்சியின் கடின தன்மை - Intermediate. உடல் கோணம் - Strength, Balance. இந்த ஆசனம் பழகுவது கொஞ்சம் கடினம் என்றாலும் இந்த ஆசனத்தை முறையாகப் பயிற்சி செய்வதால் உடல் தேக்கு போல் வலிமையாகும் என்பது உறுதி. பத்மாசனத்தில் நன்கு பயிற்சி பெற்ற பின்பே இந்த ஆசனத்தை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆசனம் பத்மாசன நிலையில் உட்காருவதால் இடுப்பு, தொடைகள், மூட்டு, முழங்கால்கள் அனைத்தும் பலமாகும். இந்த ஆசனம் செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினம் என்றாலும் முறையாகப் பயிற்சி செய்வதால் அடையும் பலனோ ஏராளம். சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்.... Utthita Padmasana - உத்தித பத்மாசனம் - செய்முறை முதலில் பத்மாசனத்தில் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். ["பத்மாசனம்" செய்வது எப்படி என்பதனை ”பத்மாசனம்” என்ற தலைப்பின் கீழ் காண்க. அல்லது, இந்த கட்டுரையின் முடிவில் தரப்பட்டுள்ள சுட்டியை சுட்டி (visual link preview) இங்கிருந்தே நேராக பத்மாசனத்திற்கு செல்லுங்கள்]. பத்மாசனத்தில் நேராக அமர்ந்த பின் இரு கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் விரல்கள் முன்பக்கம் இருக்குமாறு ஊன்றவும். பின் பத்மாசன நிலையில் இருந்தபடியே கைகளை ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மெதுவாக மேலே தூக்கவும். உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் இதே நிலையில் இருக்கவும். மூச்சை ஆழமாக இழுத்து சுவாசிக்கவும். அதன் பின் மெதுவாக உடலை கீழே இறக்கவும். சில விநாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் பயிற்சி எடுக்கவும். இந்த ஆசனத்தை 3 அல்லது 5 தடவை செய்யலாம். https://youtu.be/BaDoE5B2j2w ஆரம்பத்தில் 5 விநாடி நேரம் இதே நிலையில் இருக்கப் பழகி அதன்பின் 30 முதல் 40 விநாடி நேரம் இருக்க பயிற்சி எடுக்கவும். பயிற்சியின் பலன்கள் உத்தித பத்மாசனம் செய்வதால் மணிக்கட்டு, இரு கைகள், கை விரல்கள், உள்ளங்கை, தோள்பட்டை, மூட்டு பகுதிகள், முதுகெலும்பு, இடுப்பு, பிட்டம், தொடைகள், முழங்கால்கள், வயிறு, வயிற்று தசைகள் பலம் அடைகின்றன. ஜீரண உறுப்புகள் வளம் பெறுவதோடு வாயு தொல்லையும் நீங்குகின்றன. இப்பயிற்சிமூலம் ஜீரணமண்டலம் அதிகம் அழுத்தப்பட்டு இரத்த ஒட்டம் அதிகரிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். குடலிறக்கம் தடுக்கப்படும். கைகளின் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அதிக வலுவைத்தரும். வயிற்று தசைகள் இறுக்கப்பட்டு தொந்தி மறையும். அதுமட்டுமல்ல ஜீரண உறுப்புகள் மற்றும் இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து உள்ளுறுப்புகளும் வலிமைபெறும். முக்கிய குறிப்புகள் கைகள், தோள்கள், மணிகட்டுகளில் சுளுக்கு, தசைபிடிப்பு மற்றும் காயங்கள் எதாவது இருந்தால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய வேண்டாம். முதுகு, இடுப்பு, மார்பு பகுதிகளில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். உடலின் மொத்த எடையையும் கைகளே தாங்குவதால் பலவீனமான கைகள் மற்றும் எலும்புகளை கொண்டவர்கள் தயவு செய்து இதனை செய்ய முயற்சிக்க வேண்டாம். தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள், எப்போதும் பதட்டமாகவே இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆசனம் செய்யும்போது விரைவான சுவாசம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனம் அமைதியாக இல்லாவிட்டால் எதிர்மறையான பலன்களை உண்டாக்கலாம். ஆரம்பத்தில் சொன்னதுபோல பத்மாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்பு உத்தித பட்மாசனத்தை பயிற்சி செய்ய முன்வரவும். ******* பத்மாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?!... கீழேயுள்ள "விஷீவல் லிங்கை" (visual link preview) அதாவது பேனர் (Banner) மீது லேசாக தட்டுங்கள். நீங்கள் தட்டுகிற அந்த தட்டு இங்கிருந்தே கமலாசனம் என்று அழைக்கப்படும் பத்மாசனத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்... எஞ்ஜாய்... Padmasana - பத்மாசனம் - Personality Fittingபத்மம், கமலம் இரண்டுமே தாமரையைத்தான் குறிக்கும். எனவே இந்த ஆசனம் Padmasana - பத்மாசனம் என்றும், கமலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இன்றைய பதிவில் நாம் உத்தித பத்மாசனம் என்னும் ஆசனத்தைப்பற்றிதான் பார்க்க இருக்கின்றோம். பத்மாசனம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?... அதனுடைய "அப்டேட் வெர்சன்"தான் இந்த Utthita Padmasana - உத்தித பத்மாசனம். ”உத்தித” என்றால் சமஸ்கிருதத்தில் "உயர்த்துதல்" அல்லது "தூக்குதல்" என்று பொருள். பத்மாசன நிலையில் இருந்தபடியே உடலை தரையில் இருந்து மேலே உயர்த்துவதால் இந்த ஆசனம் "உத்தித பத்மாசனம்" (Utthita Padmasana) என அழைக்கப்படுகிறது. தரையில் உட்கார்ந்தபடி செய்வது பத்மாசனம் என்றால் அதே பத்மாசனத்தை அந்தரத்தில் செய்தால் அதுவே ”உத்தித பத்மாசனம்” ஆகும். "Elevated" என்றால் ஆங்கிலத்தில் "உயர்த்தப்பட்ட" என்று அர்த்தம். எனவேதான் ஆங்கிலத்தில் இது "உயர்த்தப்பட்ட தாமரை ஆசனம்" என்று பொருள்படும்படி "Elevated lotus Pose" என அழைக்கப்படுகிறது. இதனை சமஸ்கிருதத்தில் "துலாசனம்" (துலாம் +ஆசனம்) எனவும் அழைக்கின்றனர். "துலாம்" என்பது தராசை குறிக்கும். இந்த ஆசனத்தில் இருக்கும்போது உடலின் அமைப்பு பார்ப்பதற்கு பொருள்களை எடை போடும் "தராசு" போல் இருப்பதால் இதனை சமஸ்கிருதத்தில் "துலாசனம்" எனவும். தமிழில் "தராசு ஆசனம்" எனவும் அழைக்கின்றனர். "தராசு" ஆங்கிலத்தில் "ஸ்கேல்" (Scale) என்று அழைக்கப்படுகிறதல்லவா அதனால் இந்த ஆசனம் ஆங்கிலத்தில் "Scale Pose" என குறிப்பிடப்படுகிறது. இதற்கு சமஸ்கிருதத்தில் இன்னும் ஒரு பெயரும் இருக்கிறது. அதுதான் "Utpluthih asana" (உட்ப்ளுதிஹ் ஆசனம்). "உட்ப்ளுதிஹ்" என்றால் சமஸ்கிருதத்தில் "தூக்குதல்" அல்லது "வேரோடு பிடுங்குதல்" என்று பொருள். இந்த ஆசனத்தில் மொத்த உடலும் இரு கைகள் மூலம் மேலே தூக்கப்படுவதால் இதற்கு "உட்ப்ளுதிஹ் ஆசனம்" (Utpluthih asana) என்று பெயர். உத்தித பத்மாசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Utthita Padmasana. தமிழ் - உத்தித பத்மாசனம். சமஸ்கிருதம் - Tulasana. (துலாசனம்), Utpluthih asana (உட்ப்ளுதிஹ் ஆசனம்). ஆங்கிலம் - Scale Pose. வேறுபெயர்கள் - Elevated lotus Pose. ஆசனத்தின் நிலை - Sitting. பயிற்சியின் கடின தன்மை - Intermediate. உடல் கோணம் - Strength, Balance. இந்த ஆசனம் பழகுவது கொஞ்சம் கடினம் என்றாலும் இந்த ஆசனத்தை முறையாகப் பயிற்சி செய்வதால் உடல் தேக்கு போல் வலிமையாகும் என்பது உறுதி. பத்மாசனத்தில் நன்கு பயிற்சி பெற்ற பின்பே இந்த ஆசனத்தை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் இந்த ஆசனம் பத்மாசன நிலையில் உட்காருவதால் இடுப்பு, தொடைகள், மூட்டு, முழங்கால்கள் அனைத்தும் பலமாகும். இந்த ஆசனம் செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினம் என்றாலும் முறையாகப் பயிற்சி செய்வதால் அடையும் பலனோ ஏராளம். சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்.... Utthita Padmasana - உத்தித பத்மாசனம் - செய்முறை முதலில் பத்மாசனத்தில் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். ["பத்மாசனம்" செய்வது எப்படி என்பதனை ”பத்மாசனம்” என்ற தலைப்பின் கீழ் காண்க. அல்லது, இந்த கட்டுரையின் முடிவில் தரப்பட்டுள்ள சுட்டியை சுட்டி (visual link preview) இங்கிருந்தே நேராக பத்மாசனத்திற்கு செல்லுங்கள்]. பத்மாசனத்தில் நேராக அமர்ந்த பின் இரு கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் விரல்கள் முன்பக்கம் இருக்குமாறு ஊன்றவும். பின் பத்மாசன நிலையில் இருந்தபடியே கைகளை ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மெதுவாக மேலே தூக்கவும். உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் இதே நிலையில் இருக்கவும். மூச்சை ஆழமாக இழுத்து சுவாசிக்கவும். அதன் பின் மெதுவாக உடலை கீழே இறக்கவும். சில விநாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் பயிற்சி எடுக்கவும். இந்த ஆசனத்தை 3 அல்லது 5 தடவை செய்யலாம். https://youtu.be/BaDoE5B2j2w ஆரம்பத்தில் 5 விநாடி நேரம் இதே நிலையில் இருக்கப் பழகி அதன்பின் 30 முதல் 40 விநாடி நேரம் இருக்க பயிற்சி எடுக்கவும். பயிற்சியின் பலன்கள் உத்தித பத்மாசனம் செய்வதால் மணிக்கட்டு, இரு கைகள், கை விரல்கள், உள்ளங்கை, தோள்பட்டை, மூட்டு பகுதிகள், முதுகெலும்பு, இடுப்பு, பிட்டம், தொடைகள், முழங்கால்கள், வயிறு, வயிற்று தசைகள் பலம் அடைகின்றன. ஜீரண உறுப்புகள் வளம் பெறுவதோடு வாயு தொல்லையும் நீங்குகின்றன. இப்பயிற்சிமூலம் ஜீரணமண்டலம் அதிகம் அழுத்தப்பட்டு இரத்த ஒட்டம் அதிகரிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். குடலிறக்கம் தடுக்கப்படும். கைகளின் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அதிக வலுவைத்தரும். வயிற்று தசைகள் இறுக்கப்பட்டு தொந்தி மறையும். அதுமட்டுமல்ல ஜீரண உறுப்புகள் மற்றும் இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து உள்ளுறுப்புகளும் வலிமைபெறும். முக்கிய குறிப்புகள் கைகள், தோள்கள், மணிகட்டுகளில் சுளுக்கு, தசைபிடிப்பு மற்றும் காயங்கள் எதாவது இருந்தால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய வேண்டாம். முதுகு, இடுப்பு, மார்பு பகுதிகளில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். உடலின் மொத்த எடையையும் கைகளே தாங்குவதால் பலவீனமான கைகள் மற்றும் எலும்புகளை கொண்டவர்கள் தயவு செய்து இதனை செய்ய முயற்சிக்க வேண்டாம். தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள், எப்போதும் பதட்டமாகவே இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆசனம் செய்யும்போது விரைவான சுவாசம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனம் அமைதியாக இல்லாவிட்டால் எதிர்மறையான பலன்களை உண்டாக்கலாம். ஆரம்பத்தில் சொன்னதுபோல பத்மாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்பு உத்தித பட்மாசனத்தை பயிற்சி செய்ய முன்வரவும். ******* பத்மாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?!... கீழேயுள்ள "விஷீவல் லிங்கை" (visual link preview) அதாவது பேனர் (Banner) மீது லேசாக தட்டுங்கள். நீங்கள் தட்டுகிற அந்த தட்டு இங்கிருந்தே கமலாசனம் என்று அழைக்கப்படும் பத்மாசனத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்... எஞ்ஜாய்... Padmasana - பத்மாசனம் - Personality Fittingபத்மம், கமலம் இரண்டுமே தாமரையைத்தான் குறிக்கும். எனவே இந்த ஆசனம் Padmasana - பத்மாசனம் என்றும், கமலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது.