சோமாசனம் – Somasana. இன்று யோகாசனப் பயிற்சியானது (Practice for physical health - Somasana) உலக மக்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. பல இளம் வயதினர் அழகை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் யோக பயிற்சியை நாடுகின்றனர். யோகாசனப் பயிற்சியானது அழகையும் ஆரோக்கியத்தையும் மட்டுமல்ல. உடலிலுள்ள நாடி, நரம்புகளையெல்லாம் சுத்தப்படுத்தும் வேலையையும் செய்வதால் மன அமைதியையும், நல்ல சிந்தனையையும் தரவல்லது. மன அமைதியை தரக்கூடிய, தியானம் பயில்வதற்கு உகந்த அதே வேளையில் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ”சோமாசனம்” (Somasana) என்னும் ஆசனத்தை பற்றியும் அதை பயிற்சி செய்யும் முறையை பற்றியும் பார்ப்போம். பெயர் - Somasana. தமிழில் - சோமாசனம். சமஸ்கிருதம் - ஆங்கிலம் - வேறுபெயர்கள் - ஆசனத்தின் நிலை - பயிற்சியின் கடின தன்மை - உடல் கோணம் - Practice for physical health - Somasana. Practice of Somasana - செய்முறை. சோமசனம் என்பது ”பத்மாசனம்” போலவே உட்காரவேண்டும். ஆனால் கைகள் இரண்டையும் மடிமீது வைத்தல் வேண்டும். ஒரு கெட்டியான விரிப்பின் மீது இரண்டு காலையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி வலது தொடைமீது வைக்கவும். அதே போல் வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் மடியின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கவும். கண்களை மூடிக்கொள்ளவும். மூச்சை மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும். மனதில் கண்டதையும் சிந்திக்காமல் மனதை அமைதியாக வைத்திருங்கள். இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும். இரண்டு நிமிடம் இருந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக்கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும். அதாவது இடது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். அதன்பின் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக அமரவும். கண்களை மூடிக்கொள்ளவும். மூச்சை சீராக விடவும். இந்த பயிற்சியை திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரவும். Benefits of Training - பலன்கள். இந்த சோமாசனம் பயிற்சியை தொடர்ந்து செய்வதால் என்ன பலன்களெல்லாம் கிடைக்கும் என கேட்கிறீர்களா?.. உங்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே இதில் பலன்கள் கிடைக்கின்றன். முக்கியமாக மனதிற்கு அமைதியை கொடுத்து மகிழ்ச்சியைப் பெருக்குகின்றன. ”சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.. சோமாசன பயிற்சியால் சங்கடங்கள் அகலும். குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம். இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலுபெறுகின்றன. முதுகெலும்புகள் பலம் பெறுகின்றன.
சோமாசனம் – Somasana. இன்று யோகாசனப் பயிற்சியானது (Practice for physical health - Somasana) உலக மக்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. பல இளம் வயதினர் அழகை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் யோக பயிற்சியை நாடுகின்றனர். யோகாசனப் பயிற்சியானது அழகையும் ஆரோக்கியத்தையும் மட்டுமல்ல. உடலிலுள்ள நாடி, நரம்புகளையெல்லாம் சுத்தப்படுத்தும் வேலையையும் செய்வதால் மன அமைதியையும், நல்ல சிந்தனையையும் தரவல்லது. மன அமைதியை தரக்கூடிய, தியானம் பயில்வதற்கு உகந்த அதே வேளையில் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ”சோமாசனம்” (Somasana) என்னும் ஆசனத்தை பற்றியும் அதை பயிற்சி செய்யும் முறையை பற்றியும் பார்ப்போம். பெயர் - Somasana. தமிழில் - சோமாசனம். சமஸ்கிருதம் - ஆங்கிலம் - வேறுபெயர்கள் - ஆசனத்தின் நிலை - பயிற்சியின் கடின தன்மை - உடல் கோணம் - Practice for physical health - Somasana. Practice of Somasana - செய்முறை. சோமசனம் என்பது ”பத்மாசனம்” போலவே உட்காரவேண்டும். ஆனால் கைகள் இரண்டையும் மடிமீது வைத்தல் வேண்டும். ஒரு கெட்டியான விரிப்பின் மீது இரண்டு காலையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி வலது தொடைமீது வைக்கவும். அதே போல் வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் மடியின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கவும். கண்களை மூடிக்கொள்ளவும். மூச்சை மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும். மனதில் கண்டதையும் சிந்திக்காமல் மனதை அமைதியாக வைத்திருங்கள். இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும். இரண்டு நிமிடம் இருந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக்கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும். அதாவது இடது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். அதன்பின் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக அமரவும். கண்களை மூடிக்கொள்ளவும். மூச்சை சீராக விடவும். இந்த பயிற்சியை திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரவும். Benefits of Training - பலன்கள். இந்த சோமாசனம் பயிற்சியை தொடர்ந்து செய்வதால் என்ன பலன்களெல்லாம் கிடைக்கும் என கேட்கிறீர்களா?.. உங்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே இதில் பலன்கள் கிடைக்கின்றன். முக்கியமாக மனதிற்கு அமைதியை கொடுத்து மகிழ்ச்சியைப் பெருக்குகின்றன. ”சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.. சோமாசன பயிற்சியால் சங்கடங்கள் அகலும். குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம். இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலுபெறுகின்றன. முதுகெலும்புகள் பலம் பெறுகின்றன.