பிறையாசனம். Arc of the Moon Pose. மனித உடல் நோயின்றி வாழ கடின உழைப்பு அவசியம். முன்பெல்லாம் அனைவருக்குமே கடின உழைப்பு இருந்தது. இதனால் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ உழைப்பு என்றாலே அது பலபேருக்கு கடினமானதாக இருப்பதால் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிட்டது.. எனவே இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் திரும்ப பெறவேண்டுமெனில் உழைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இங்கேதான் நமக்கு கைகொடுக்க வருகிறது உடற்பயிற்சி. பரபரப்பும் மன அழுத்தமும் மலிந்துகிடக்கும் இவ்வேளையில் வெறும் உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதோடு நிறுத்திவிடாமல் மனதிற்கும் பயிற்சியளிக்க வேண்டியிருப்பதால் இக்கட்டான இந்த சூழ்நிலையில் நமக்கு கைகொடுக்க வருகிறது பரபரப்பில்லாமல் நிதானமாக செய்யப்படும் யோகாசன பயிற்சிகள். யோகாசன பயிற்சியில் பல கடினமான பயிற்சிகள் இருந்தாலும் ஆரம்பகட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி செய்வதற்கென சில எளிமையான பயிற்சிகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் “பிறையாசனம்” (Pirai Asana) என்னும் பயிற்சியாகும். இந்த பிறையாசன பயிற்சியில் உடல் பிறை வடிவில் அமைவதால் இது பிறையாசனம் என அழைக்கப்படுகிறது. வாருங்கள் பிறையாசனம் பயிற்சி செய்யும் விதத்தை தெரிந்து கொள்ளலாம்.. செய்முறை. இரு கால்களுக்கிடையேயும் சுமார் இரண்டடி இடைவெளி இருக்கும்படி கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். பின் இருகைகளையும் தலைக்கு மேலாக நேராக உயர்த்தவும். அதன்பின் கைகளையும் உடலையும் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே பின்னால் மெதுவாக வளைக்கவும். இந்நிலையில் உள்ளங்கை மேலே பார்த்தபடி இருக்கட்டும். 20 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். இந்நிலையில் பார்ப்பதற்கு உங்கள் உடல் பிறைநிலவு போன்று வளைந்த நிலையில் இருப்பதால் “பிறையாசனம்” என அழைக்கப்படுகிறது. சுமார் 20 வினாடிகள் கழித்து உடலை நேராக்கவும். இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று தடவை பயிற்சி செய்யவும். இதற்கு மாற்று ஆசனமாக விளங்குவது “பாதஹஸ்த்த ஆசனம்“. எனவே பிறையாசன பயிற்சி முடிந்தவுடன் அடுத்த ஆசனமாக பாதஹஸ்த்த ஆசனம் செய்தல் வேண்டும். பலன்கள். இந்த பிறையாசன பயிற்சியால் முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு முதுகுத்தண்டு நன்கு நெகிழும் தன்மையை பெறுகிறது. இருதயமும், நுரைஈரலும் நன்கு பலமடைகின்றன. இதன்மூலம் இரத்த அழுத்தம் சீராகிறது. சுவாசமண்டல இயக்கம் மேம்படுகிறது. இடுப்புக்கு நல்ல வனப்பையும், வலிமையையும் அளிக்கக்கூடியது. குறிப்பு. நம்மால் எவ்வளவு பின்னால் உடலை வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தால் போதுமானது. முதுகில் வலி ஏற்படும் அளவில் உடலை வளைத்தல்கூடாது. ஆரம்பத்தில் இதனை பயிற்சி செய்ய கடினமானதாக இருக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்ய எளிதானதாக மாறும். இந்த ஆசனம் பயிலும்போது கால்மூட்டுகள் வளையாமல் இருக்கவேண்டியது அவசியம். கழுத்து பிரச்சனை மற்றும் தோள்வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.
பிறையாசனம். Arc of the Moon Pose. மனித உடல் நோயின்றி வாழ கடின உழைப்பு அவசியம். முன்பெல்லாம் அனைவருக்குமே கடின உழைப்பு இருந்தது. இதனால் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ உழைப்பு என்றாலே அது பலபேருக்கு கடினமானதாக இருப்பதால் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிட்டது.. எனவே இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் திரும்ப பெறவேண்டுமெனில் உழைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இங்கேதான் நமக்கு கைகொடுக்க வருகிறது உடற்பயிற்சி. பரபரப்பும் மன அழுத்தமும் மலிந்துகிடக்கும் இவ்வேளையில் வெறும் உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதோடு நிறுத்திவிடாமல் மனதிற்கும் பயிற்சியளிக்க வேண்டியிருப்பதால் இக்கட்டான இந்த சூழ்நிலையில் நமக்கு கைகொடுக்க வருகிறது பரபரப்பில்லாமல் நிதானமாக செய்யப்படும் யோகாசன பயிற்சிகள். யோகாசன பயிற்சியில் பல கடினமான பயிற்சிகள் இருந்தாலும் ஆரம்பகட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி செய்வதற்கென சில எளிமையான பயிற்சிகளும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் “பிறையாசனம்” (Pirai Asana) என்னும் பயிற்சியாகும். இந்த பிறையாசன பயிற்சியில் உடல் பிறை வடிவில் அமைவதால் இது பிறையாசனம் என அழைக்கப்படுகிறது. வாருங்கள் பிறையாசனம் பயிற்சி செய்யும் விதத்தை தெரிந்து கொள்ளலாம்.. செய்முறை. இரு கால்களுக்கிடையேயும் சுமார் இரண்டடி இடைவெளி இருக்கும்படி கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். பின் இருகைகளையும் தலைக்கு மேலாக நேராக உயர்த்தவும். அதன்பின் கைகளையும் உடலையும் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே பின்னால் மெதுவாக வளைக்கவும். இந்நிலையில் உள்ளங்கை மேலே பார்த்தபடி இருக்கட்டும். 20 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். இந்நிலையில் பார்ப்பதற்கு உங்கள் உடல் பிறைநிலவு போன்று வளைந்த நிலையில் இருப்பதால் “பிறையாசனம்” என அழைக்கப்படுகிறது. சுமார் 20 வினாடிகள் கழித்து உடலை நேராக்கவும். இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று தடவை பயிற்சி செய்யவும். இதற்கு மாற்று ஆசனமாக விளங்குவது “பாதஹஸ்த்த ஆசனம்“. எனவே பிறையாசன பயிற்சி முடிந்தவுடன் அடுத்த ஆசனமாக பாதஹஸ்த்த ஆசனம் செய்தல் வேண்டும். பலன்கள். இந்த பிறையாசன பயிற்சியால் முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு முதுகுத்தண்டு நன்கு நெகிழும் தன்மையை பெறுகிறது. இருதயமும், நுரைஈரலும் நன்கு பலமடைகின்றன. இதன்மூலம் இரத்த அழுத்தம் சீராகிறது. சுவாசமண்டல இயக்கம் மேம்படுகிறது. இடுப்புக்கு நல்ல வனப்பையும், வலிமையையும் அளிக்கக்கூடியது. குறிப்பு. நம்மால் எவ்வளவு பின்னால் உடலை வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தால் போதுமானது. முதுகில் வலி ஏற்படும் அளவில் உடலை வளைத்தல்கூடாது. ஆரம்பத்தில் இதனை பயிற்சி செய்ய கடினமானதாக இருக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்ய எளிதானதாக மாறும். இந்த ஆசனம் பயிலும்போது கால்மூட்டுகள் வளையாமல் இருக்கவேண்டியது அவசியம். கழுத்து பிரச்சனை மற்றும் தோள்வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.